Saturday, July 16, 2011

ஆதரவற்ற விதவைகளுக்கான அரசாங்க உதவித் திட்டம்!


ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

Friday, July 15, 2011

உம்ரா செய்வதன் ஒழுங்கு முறைகள்

தமிழாக்கம்:  மெளலவி முஹம்மத் ரிஸ்மி ஜுனைத் (அபூஅப்தில்லாஹ்) 

நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் வழிப்பாட்டு அடையாளங்களாகும். எவரேனும் (கஃபாவெனும்) அல்லாஹ்வின் வீட்டை (நாடி வந்து) ஹஜ், உம்ரா என்பவற்றை செய்யும்போது அவ்விரண்டுக்கும் இடையிலும் தொங்கோட்டம் ஓடிவருவது அவர்கள் மீது குற்றமில்லை.” (02: 158)

ஜம்ஜம்-நீரூற்று- இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

Tuesday, July 12, 2011

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள...

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள... Saudi Arabia Jawazaat services via mobile.....! part 1

Monday, July 11, 2011

அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'


அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிகளில் யோகா என்ற பெயரில் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படுகிறதா..?



பள்ளிகளில், இந்த மாதம் யோகா, மருத்துவ முகாம் மற்றும் பிசியோதெரபி ஆகிய முகாம்களை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இம்மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை, யோகாசன கல்வி முகாம்களையும், 19ம் தேதி மருத்துவ பரிசோதனை முகாம்களையும், 27ம் தேதி பிசியோதெரபி முகாம்களையும் பள்ளிகளில் நடத்த தேவையான நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்திட வேண்டும்.

ஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்


இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது.

தாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்?


அல்லாஹ் அளவற்ற அருளாளன்! சகோதரர்களே இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம் அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!·

மறந்து விட்டீர்களா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணியை.


நீதிமன்றில்.. நீதிபதிகள் பார்த்திருக்க...அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்... காவல் துறை கண்முன்பு  ஒரு முஸ்லிம் கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இஸ்லாம் கூறும் நற்குணம்,,,,,,

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

கஞ்சா வியாபாரியிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள்.


கண்ணியத்திற்குரிய பாக்கர் , ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியவர்களுக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் ட்ரஸ்ட் என்று 2002இல் நான் எழுதியபோது அனைவரும் சேர்ந்து மறுத்தீர்கள். 

Sunday, July 10, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதில் நிகாப் அணிந்த ஒரு சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

Saturday, July 9, 2011

நோன்பிருக்க முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?

சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.

நோன்பும் - பெண்களும்


நோயாளிகள் - பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.

ரமளான் எத்தனை நாட்கள்? அதில் சலுகைகள் யார் யாருக்கு..?

ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான். எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)

நோன்பு எதற்கு?


பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.

நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.